குறள் 370

அவாவறுத்தல்

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்

aaraa iyatrkai avaaneeppin andhnilaiyae
paeraa iyatrkai tharum


Shuddhananda Bharati

Curbing of desire

Off with desire insatiate
You gain the native blissful state.


GU Pope

The Extirpation of Desire

Drive from thy soul desire insatiate;
Straight'way is gained the moveless blissful state.

The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that
can never be changed.


Mu. Varadarajan

ஒருபோதும்‌ நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால்‌ ஒழித்த அந்நிலையே எப்போதும்‌ மாறாதிருக்கும்‌ இன்ப வாழ்வைத்‌ தரும்‌.


Parimelalagar

ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின்; அந்நிலையே பேரா இயற்கை தரும் - அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும்.
விளக்கம்:
(நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம் பயனும் நிலையாமையின் வேண்டாதனவாயபொருள்களை வேண்டி மேன்மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயினஇன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின் வீட்டினை, 'பேரா இயற்கை' என்றும், அஃது அவா நீத்த வழிப் பெறுதல் ஒரு தலையாகலின், 'அந்நிலையே தரும்' என்றும் கூறினார்; "ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடு" (திருவாய், 8,8,6) என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை உடையவனை வட நூலார் 'சீவன் முத்தன்' என்ப. இதனால் வீடாவது இது என்பதூஉம், அஃது அவா அறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவனாயின், அது விட்ட அப்பொழுதே அழியாத இயல்பினைத் தரும்,
(என்றவாறு). இயல்பாவது என்று மொரு படிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.