குறள் 368

அவாவறுத்தல்

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

avaaillaark killaakundh thunpam akhthuntael
thavaaathu maenmael varum


Shuddhananda Bharati

Curbing of desire

Desire extinct no sorrow-taints
Grief comes on grief where it pretends.


GU Pope

The Extirpation of Desire

Affliction is not known where no desires abide;
Where these are, endless rises sorrow's tide.

There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly
come, more and more.


Mu. Varadarajan

அவா இல்லாதவர்க்குத்‌ துன்பம்‌ இல்லையாகும்‌; அவா இருந்தால்‌ எல்லாத்‌ துன்பங்களும்‌ மேலும்மேலும்‌ ஒழியாமல்‌ வரும்‌.


Parimelalagar

அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் - அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை; அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும் - ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும்.
விளக்கம்:
(உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இப்பொழுது அவாவால் செய்து கொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனால் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும்; அஃது உண்டாயின், துன்பமானது கெடாது மேன்மேல் வரும்,
(என்றவாறு)