குறள் 366

அவாவறுத்தல்

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா

anjsuva thorum aranae oruvanai
vachippa thorum avaa


Shuddhananda Bharati

Curbing of desire

Dread desire; Virtue is there
To every soul desire is snare!


GU Pope

The Extirpation of Desire

Desire each soul beguiles;
True virtue dreads its wiles.

It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to
deceive (and destroy) him.


Mu. Varadarajan

ஒருவன்‌ அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம்‌; ஏன்‌ எனில்‌ ஒருவனைச்‌ சோர்வு கண்டு கெடுத்து வஞ்சிப்பது அவாவே.


Parimelalagar

ஒருவனை வஞ்சிப்பது அவா - மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை, மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே வீழ்த்துக் கெடுக்கவல்லது அவர்; அஞ்சுவதே அறன்-ஆகலான், அவ்வவாவை அஞ்சி காப்பதே துறவறமாவது.
விளக்கம்:
('ஓரும்' என்பன அசைநிலை. அநாதியாய்ப் போந்த அவா, ஓரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின், அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது, வாய்மை வேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம் என்பதூஉம் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை ; ஆதலால், அதனை அஞ்சு வதே அறம்,
(என்றவாறு) வஞ்சனை செய்தல் - நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று , பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது ஆசையின்மை வேண்டுமென்றது.