குறள் 359

மெய்யுணர்தல்

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

saarpunarndhthu saarpu kedaolukin matrraliththuch
saartharaa saartharu noi


Shuddhananda Bharati

Truth consciousness

Know the Refuge; off with bondage
Be free from ills of thraldom, O sage.


GU Pope

Knowledge of the True

The true 'support' who knows- rejects 'supports' he sought before-
Sorrow that clings all destroys, shall cling to him no more.

He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption).


Mu. Varadarajan

எல்லாப்‌ பொருளுக்கும்‌ சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக்‌ கெடுமாறு ஒழுகினால்‌, சார்வதற்கு உரிய துன்பங்கள்‌ திரும்ப வந்து அடையா.


Parimelalagar

சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் - ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா.
விளக்கம்:
(ஆகுபெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் 'சார்பு' என்றார். 'ஈண்டு' ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும்; யோக நூல்களுள் காண்க. 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன - பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் பிறந்த உடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக் கடவனவாய்க் கிடந்தன.அவை விளக்கின்முன் இருள்போல ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், 'அழித்துச் சார்தரா' என்றார். இதனை ஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக் காரணம் ஆகலான், நல்வினைப் பயனும் 'நோய்' எனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளை உணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும்வழிக் கிடந்த துன்பங்கள் எல்லாம் என் செய்யும் என்னும் கடாவை ஆசங்கித்து, அவை ஞான யோகங்களின் முதிர்ச்சி உடைய உயிரைச் சாராமாட்டாமையானும், வேறு சார்பு இன்மையானும் 'கெட்டு விடும்' என்பது, இதனால் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட் ஒழுகுவனாயின், அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா; சாரக்கடவன வாய துன்பங்கள்,
(என்றவாறு). சார்பு - வினைச் சார்பு; கெட ஒழுகல் - காமம் வெகுளி மயக்கமின்றி மெய் யுணர்ச்சியானொழுகுதல். இஃது உண்மையைக் கண்டு அக்காட்சியைத் தப்பா மல் முடிய நிற்பனாயின், சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப்போ மென்றது.