குறள் 358

மெய்யுணர்தல்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு

pirappaennum paethaimai neengkachiirappaennum semporul
semporul kaanpathu arivu


Shuddhananda Bharati

Truth consciousness

It is knowledge to know Self-Truth
And remove the folly of birth.


GU Pope

Knowledge of the True

When folly, cause of births, departs; and soul can view
The truth of things, man's dignity- 'tis wisdom true.

True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven.


Mu. Varadarajan

பிறவித்‌ துன்பத்திற்குக்‌ காரணமான அறியாமை நீங்குமாறு, முத்தி என்னும்‌ சிறந்த நிலைக்குக்‌ காரணமான செம்பொருளைக்‌ காண்பதே மெய்யுணர்வு.


Parimelalagar

பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட; சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய் உணர்வாவது.
விளக்கம்:
(பிறப்பென்னும் பேதைமை' எனவும், 'சிறப்பு என்னும் செம்பொருள்' எனவும் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள்அவிச்சை ஏனைய நான்கிற்கும் காரணமாதல் உடைமையின், அச் சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாகக் கூறினார். எல்லாப் பொருளினும் சிறந்ததாகலான், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. தோற்றக் கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மையால் தன்னையொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய், தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற் பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி, அதனைச் 'செம்பொருள்' என்றார். மேல் 'மெய்ப்பொருள்' எனவும், 'உள்ளது' எனவும் கூறியதூஉம் இது பற்றி என உணர்க. அதனைக் காண்கையாவது உயிர் தன் அவிச்சை கெட்டு அதனோடு, ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல்; இதனைச் 'சமாதி' எனவும், 'சுக்கிலத்தியானம்' எனவும் கூறுப. உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனான் யாதொன்று பாவிக்கப்பட்டது. அஃது அதுவாய்த் தோன்றும் என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபு ஆகலின், வீடு எய்துவார்க்கு அக்காரத்துப் பிறப்பிற்கு ஏதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான், அதனை முன்னே பயில்தலாய இதனின் மிக்க உபாயம் இல்லை என்பது அறிக. இதனான் பாவனை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்), பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் , பிறவாமையாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம்,
(என்றவாறு). பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாக வும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத், தனக்குச் சாவில்லை யாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டு மென்றவா-றாயிற்று.