குறள் 350

துறவு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

patrruka patrratrraan patrrinai appatrraip
patrruka patrru vidatrku


Shuddhananda Bharati

Renunciation

Bind Thyself to the unbound one
That binding breaks all bonds anon.


GU Pope

Renunciation

Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,
Cling to that bond, to get thee free from every clinging thing.

Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.


Mu. Varadarajan

பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும்‌ பற்றிக்‌ கொள்ள வேண்டும்‌; உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப்‌ பற்ற வேண்டும்‌.


Parimelalagar

பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை, 'இதுவே நன்னெறி' என்று மனத்துக் கொள்க; அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தால் செய்க, விடாது வந்த பற்று விடதற்கு.
விளக்கம்:
(கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் 'பற்றற்றான்' என்றார். 'பற்று அற்றான் பற்று' என்புழி, ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் 'பற்று' என்றது, பற்றப்படுவதனை 'அதன்கண் உபாயம்' என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும்உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக ; அதனைப் பற்றுங்கால், பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக,
(என்றவாறு). பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.