குறள் 348

துறவு

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்

thalaippattaar theerath thurandhthaar mayangki
valaippattaar matrrai yavar


Shuddhananda Bharati

Renunciation

Who renounce all are free from care
Others suffer delusive snare.


GU Pope

Renunciation

Who thoroughly 'renounce' on highest height are set;
The rest bewildered, lie entangled in the net.

Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.


Mu. Varadarajan

முற்றத்‌ துறந்தவரே உயர்ந்த நிலையினர்‌ ஆவர்‌. அவ்வாறு துறக்காத மற்றவர்‌, அறியாமையாகிய வலையில்‌ அகப்பட்டவர்‌ ஆவர்‌.


Parimelalagar

தீரத் துறந்தார் தலைப்பட்டார் - முற்றத் துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார்; மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் - அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார்.
விளக்கம்:
(முற்றத் துறத்தலாவது, பொருள்களையும் இருவகை உடம்பினையும் உவர்த்துப் பற்றறவிடுதல். அங்ஙனம் துறவாமையாவது, அவற்றுள் யாதானும் ஒன்றின்கண் சிறிதாயினும் பற்றுச் செய்தல். துணிவுபற்றித் 'தலைப்பட்டார்' என்றும், பொய்ந்நெறி கண்டே பிறப்பு வலையுள் அகப்படுதலின், 'மயங்கி' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) பற்றறத் துறந்தார் முத்தியைத் தலைப்பட்டார்; அல்லாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே யகப்பட்டார்,
(என்றவாறு). இது மறுமைப் பயன் கூறிற்று.