குறள் 345

துறவு

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை

matrrum thodarppaadu yevankol pirapparukkal
utrraarkku udampum mikai


Shuddhananda Bharati

Renunciation

Why add to bonds while this body
Is too much for saints to be birth-free.


GU Pope

Renunciation

To those who sev'rance seek from being's varied strife,
Flesh is burthen sore; what then other bonds of life?

What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).


Mu. Varadarajan

பிறவித்‌ துன்பத்தைப்‌ போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும்‌ மிகையான பொருள்‌; ஆகையால்‌ அதற்குமேல்‌ வேறு தொடர்பு கொள்வது ஏனோ?


Parimelalagar

பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை - பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவிஆகிய உடம்பும் மிகை ஆம்; மற்றும் தொடர்ப்பாடு எவன் - ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்?
விளக்கம்:
('உடம்பு' என்ற பொதுமையான், உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள், அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம்; இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?
(என்றவாறு).