குறள் 323

கொல்லாமை

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று

onraaka nallathu kollaamai matrrathan
pinsaarap poiyaamai nanru


Shuddhananda Bharati

Non

Not to kill is unique good
The next, not to utter falsehood.


GU Pope

Not killing

Alone, first of goods things, is 'not to slay';
The second is, no untrue word to say.

Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood.


Mu. Varadarajan

இணையில்லாத ஓர்‌ அறமாகக்‌ கொல்லாமை நல்லது; அதற்கு அடுத்த நிலையில்‌ வைத்துக்‌ கூறத்தக்கதாகப்‌ பொய்யாமை நல்லது.


Parimelalagar

ஒன்றாக நல்லது கொல்லாமை - நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று - அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று.
விளக்கம்:
('நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும், மேல் 'பொய்யாமை பொய்யாமை ஆற்றின்' எனவும், 'யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை' எனவும் கூறினார் ஆகலின், இரண்டு அறந்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே! அது நிகழாமைப்பொருட்டு, ஈண்டு, 'அதன் பின்சாரப் பொய்யாமை நன்று' என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் 'பின்சார நன்று' என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) இணையின்றாக நல்லது கொல்லாமை ; அதன்பின்பே யணைய, பொய்யாமையும் நன்று,
(என்றவாறு). இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று ; அதினும் நன்று கொல் லாமை யென்றது.