குறள் 322

கொல்லாமை

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

pakuththundu palluyir oamputhal noolor
thokuththavatrrul yellaandh thalai


Shuddhananda Bharati

Non

Share the food and serve all lives
This is the law of all the laws.


GU Pope

Not killing

Let those that need partake your meal; guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives.

The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.


Mu. Varadarajan

கிடைத்ததைப்‌ பகுத்துக்‌ கொடுத்துத்‌ தானும்‌ உண்டு பல உயிர்களையும்‌ காப்பாற்றுதல்‌, அறநூலார்‌ தொகுத்த அறங்கள்‌ எல்லாவற்றிலும்‌ தலையான அறமாகும்‌.


Parimelalagar

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு, ஐகை உயிர்களையும் ஓம்புதல்; நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்.
விளக்கம்:
('பல்லுயிரும்' என்னும் முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின், அச் சிறப்புத் தோன்ற அதனை இறந்தகால வினையெச்சத்தால் கூறினார். எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும், அவர் எல்லார்க்கும் ஒப்ப முடிதலான், 'இது தலையாய அறம்' என்றும் கூறினார்.


Manakkudavar

(இதன் பொருள்) பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல் நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றிலும் தலையான அறம், (எ - று ) இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.