குறள் 321

கொல்லாமை

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

aravinai yaathaenin kollaamai koaral
piravinai yellaandh tharum


Shuddhananda Bharati

Non

What is Virtue? 'Tis not to kill
For killing causes every ill.


GU Pope

Not killing

What is the work of virtue? 'Not to kill';
For 'killing' leads to every work of ill.

Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.


Mu. Varadarajan

அறமாகிய செயல்‌ எது என்றால்‌ ஓர்‌ உயிரையும்‌ கொல்லாமையாகும்‌; கொல்லுதல்‌ அறமல்லாத செயல்கள்‌ எல்லாவற்றையும்‌ விளைக்கும்‌.


Parimelalagar

அறவினை யாது எனின் கொல்லாமை - அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம்; கோறல் பிற வினை எல்லாம் தரும் - அவற்றைக் கொல்லுதல் பாவச் செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான்.
விளக்கம்:
(அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை 'அறவினை' என்றார். ஈண்டுப் 'பிறவினை' என்றது அவற்றின் விளைவை கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களல்லாம் கூடியம் விளைக்க மாட்டா என்பதாம் கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.)


Manakkudavar

கொல்லாமையாவது யாதோருயிரையுங் கொல்லாமை. இது வெகுளி முதிர்ந்துழி நிகழ்வதொன்றாதலின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) நல்வினை யாதெனின், கொல்லாமை ; கொல்லுதல் எல்லாத் தீவினைப்பயனையுந் தருமாதலால்,
(என்றவாறு) இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.