குறள் 304

வெகுளாமை

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற

nakaiyum uvakaiyum kolluchiinaththin pakaiyum
pakaiyum ulavo pira


Shuddhananda Bharati

Restraining anger

Is there a foe like harmful ire
Which kills the smile and joyful cheer?


GU Pope

The not being Angry

Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy?

Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?


Mu. Varadarajan

முகமலர்ச்சியையும்‌ அகமகிழ்ச்சியையும்‌ கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப்‌ பகையானவை வேறு உள்ளனவோ?


Parimelalagar

நகையும் உவகையம் கொல்லும் சினத்தின - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது; பிற பகையம் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை.
விளக்கம்:
(துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்ற அருள்முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லையாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ?
(என்றவாறு). இஃது இன்பக்கேடு வருமென்றது.