குறள் 303

வெகுளாமை

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்

maraththal vaekuliyai yaarmaatdum theeya
piraththal athanaan varum


Shuddhananda Bharati

Restraining anger

Off with wrath with any one.
It is the source of sin and pain.


GU Pope

The not being Angry

If any rouse thy wrath, the trespass straight forget;
For wrath an endless train of evils will beget.

Forget anger towards every one, as fountains of evil spring from it.


Mu. Varadarajan

யாரிடத்திலும்‌ சினங்‌ கொள்ளாமல்‌ அதை மறந்துவிட வேண்டும்‌; தீமையான விளைவுகள்‌ அந்தச்‌ சினத்தாலேயே ஏற்படும்‌.


Parimelalagar

யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர் மாட்டும் வெகுளியை ஒழிக; தீய பிறத்தல் அதனான் வரும் - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான்.
விளக்கம்:
(வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார் மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்,' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க ; தீயன பிறத்தல் அவ் வெகுளியானே வருமாதலான்,
(என்றவாறு). இது வெகுளாமை வேண்டுமென்றது.