குறள் 302

வெகுளாமை

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற

sellaa idaththuchiinandhtheethu sellidaththum ilathanin
ilathanin theeya pira


Shuddhananda Bharati

Restraining anger

Vain is wrath against men of force
Against the meek it is still worse.


GU Pope

The not being Angry

Where power is none to wreak thy wrath, wrath importent is ill;
Where thou hast power thy will to work, 'tis greater, evil still.

Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.


Mu. Varadarajan

பலிக்காத இடத்தில்‌ (தன்னைவிட வறியவரிடத்தில்‌) சினம்‌ கொள்வது தீங்கு; பலிக்கும்‌ இடத்திலும்‌ (மெலியவரிடத்திலும்‌) சினத்தைவிடத்‌ தீயவை வேறில்லை.


Parimelalagar

சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் தனக்கே தீதாம்; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர்மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை.
விளக்கம்:
(செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை,' என்றார். ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) இயலாவிடத்துச் சினந்தீது; இயலுமிடத்திலும் அதிற் றீதா யிருப்பன பிறவில்லை ,
(என்றவாறு).