குறள் 300

வாய்மை

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற

yaamaeiyaak kandavatrrul illai yenaiththonrum
vaaimaiyin nalla pira


Shuddhananda Bharati

Veracity

Of all the things we here have seen
Nothing surpasses Truth serene !


GU Pope

Veracity

Of all good things we've scanned with studious care,
There's nought that can with truthfulness compare.

Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.


Mu. Varadarajan

யாம்‌ உண்மையாகக்‌ கண்ட பொருள்களுள்‌ வாய்மையைவிட எத்தன்மையாலும்‌ சிறந்தவைகளாகச்‌ சொல்லத்‌ தக்கவை வேறு இல்லை.


Parimelalagar

யாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள்; எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை - யாதொரு தன்மையானும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை.
விளக்கம்:
(மெய் உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன; தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லாராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற்பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம். இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) யாம் மெய்யாகக் கண்டவற்றுள் மெய் சொல்லுதல் போல நன்றா யிருப்பன், வேறு யாதொன்றும் இல்லை,
(என்றவாறு) இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.