குறள் 292

வாய்மை

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

poimaiyum vaaimai yidaththa puraitheerndhtha
nanmai payakkum yenin


Shuddhananda Bharati

Veracity

E'en falsehood may for truth suffice,
When good it brings removing vice.


GU Pope

Veracity

Falsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford.

Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.


Mu. Varadarajan

குற்றம்‌ தீர்ந்த நன்மையை விளைக்குமானால்‌ பொய்யான சொற்களும்‌ வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப்‌ பெறுவனவாம்‌.


Parimelalagar

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்; பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பாலஆம்.
விளக்கம்:
(குற்றம் தீர்ந்த நன்மை: அறம்; அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல் நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம்; பயப்பின், மெய்ம்மையாம் என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை' எனவும், 'நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பொய்யும் மெய்யோ டொக்கும் ; குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்,
(என்றவாறு).