குறள் 290

கள்ளாமை

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு

kalvaarkkuth thallum uyirnilai kallaarkkuth
thallaathu puththae lulaku


Shuddhananda Bharati

The absence of fraud

Even the body rejects thieves;
The honest men, heaven receives.


GU Pope

The Absence of Fraud

The fraudful forfeit life and being here below;
Who fraud eschew the bliss of heavenly beings know.

Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.


Mu. Varadarajan

களவு செய்வார்க்கு உடலில்‌ உயிர்வாழும்‌ வாழ்வும்‌ தவறிப்போகும்‌. களவு செய்யாமல்‌ வாழ்வோர்க்குத்‌ தேவருலகம்‌ வாய்க்கத்‌ தவறாது.


Parimelalagar

கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் - களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும்; கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது - அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது ஆகிய புத்தேள் உலகும் தவறாது.
விளக்கம்:
(உயிர் நிற்றற்கு இடனாகலின், 'உயிர்நிலை' எனப்பட்டது. சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின், 'உயிர் நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். 'மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' (குறள் 566) என்புழியும் 'தள்ளுதல்' இப்பொருட்டாதல் அறிக. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும்; கள்ளாதார்க்குத் தேவருலகம் பெறுதல் தப்பாது,
(என்றவாறு) இது கள்வார் முத்தி பெறுதலுமிலர்; கள்ளாதார் சுவர்க்கம் பெறாமையுமில ரென்றது.