குறள் 289

கள்ளாமை

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்

alavalla seithaangkae veevar kalavalla
matrraiya thaetrraa thavar


Shuddhananda Bharati

The absence of fraud

They perish in their perfidy
Who know nothing but pilfery.


GU Pope

The Absence of Fraud

Who have no lore save that which fraudful arts supply,
Acts of unmeasured vice committing straightway die.

Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.


Mu. Varadarajan

களவு செய்தல்‌ தவிர மற்ற நல்லவழிகளை நம்பித்‌ தெளியாதவர்‌, அளவு அல்லாத செயல்களைச்‌ செய்து அப்போதே கெட்டழிவர்‌.


Parimelalagar

அளவு அல்ல செய்தாங்கே வீவர் - அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர்; களவு அல்ல மற்றைய தேற்றாதவர் - களவு அல்லாத பிறவற்றை அறியாதவர்.
விளக்கம்:
(தீய நினைவுகளான : பொருளுடையாரை வஞ்சிக்கு மாறும், அவ்வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்ட அதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலும் செய்தலாகலின், 'செய்து' என்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கி, கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்கும் ஆகலின், 'ஆங்கே வீவர்' என்றும் கூறினார். மற்றையவாவன: துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய், கனி, கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையே நுகர்ந்து அவ்வளவால் நிறைந்திருத்தலை அறியாமை. இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நேர் ஆகா தன செய்து அவ்விடத்தே கெடுவார்; கள் வல்லாத மற்றைய அறங்களைத் தெளியாதவர்,
(என்றவாறு) இது கள் வாரை அரசர் கொல்வரென்றது.