குறள் 286

கள்ளாமை

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

alavinkan ninrolukal aatrraar kalavinkan
kanriya kaatha lavar


Shuddhananda Bharati

The absence of fraud

They cannot walk in measured bounds
who crave and have covetous ends.


GU Pope

The Absence of Fraud

They cannot walk restrained in wisdom's measured bound,
In whom inveterate lust of fraudful gain is found.

They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.


Mu. Varadarajan

களவு செய்து பிறர்பொருள்‌ கொள்ளுதலின்‌ மிக்க விருப்பம்‌ உடையவர்‌, அளவு (சிக்கனம்‌) போற்றி வாழும்‌ நெறியில்‌ நின்று ஒழுக மாட்டார்‌.


Parimelalagar

அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெற்றியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார்; களவின்கண் கன்றிய காதலவர் - களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார்.
விளக்கம்:
(உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உள்ள விளைவுகளையும், அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் விட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் 'தருமத் தியானம்' என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.


Manakkudavar

(இதன் பொருள்) களவின்கண்ணே மிக்க ஆசையையுடையவர் நேரின் கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார்,
(என்றவாறு). இது நேர் செய்ய மாட்டாரென்றது.