குறள் 285

கள்ளாமை

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்

arulkaruthi anputaiya raathal porulkaruthip
pochsaappup paarppaarkan il


Shuddhananda Bharati

The absence of fraud

Love and Grace are not their worth
Who watch to waylay dozer's wealth.


GU Pope

The Absence of Fraud

'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,
Who neighbour's goods desire, and watch for his unguarded hour.

The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property.


Mu. Varadarajan

அருளைப்‌ பெரிதாகக்‌ கருதி அன்பு உடையவராய்‌ நடத்தல்‌, பிறருடைய பொருளைக்‌ கவர எண்ணி அவர்‌ சோர்ந்திருக்கும்‌ நிலையைப்‌ பார்ப்பவரிடத்தில்‌ இல்லை.


Parimelalagar

அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல்; பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது.
விளக்கம்:
(தமக்கு உரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வ பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சி கூடாது என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) அருளைக் குறித்து உயிர்மீது அன்புடையரா யொழுகுதல் பொருளைக் குறித்துப் பிறரது மற்வியைப் பார்ப்பார் மாட்டு இல்லை,
(என்றவாறு) இஃது அருளும் அன்பு மில்லையாமென்றது.