குறள் 283

கள்ளாமை

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

kalavinaal aakiya aakkam alavirandhthu
aavathu polak kedum


Shuddhananda Bharati

The absence of fraud

The gain by fraud may overflow
But swift to ruin it shall go.


GU Pope

The Absence of Fraud

The gain that comes by fraud, although it seems to grow
With limitless increase, to ruin swift shall go.

The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.


Mu. Varadarajan

களவு செய்து பொருள்‌ கொள்வதால்‌ உண்டாகிய ஆக்கம்‌ பெருகுவதுபோல தோன்றி, இயல்பாக இருக்க வேண்டிய அளவையும்‌ கடந்து கெட்டுவிடும்‌.


Parimelalagar

களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள்; ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும்.
விளக்கம்:
('ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.


Manakkudavar

(இதன் பொருள்). களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம் மேன்மேலும் மிகு வதுபோலக் கெடும்,
(என்றவாறு). இது பொருள் நிலையாதென்றது.