குறள் 281

கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

yellaamai vaenduvaan yenpaan yenaiththonrum
kallaamai kaakkathan naenjsu


Shuddhananda Bharati

The absence of fraud

Let him who would reproachless be
From all frauds guard his conscience free.


GU Pope

The Absence of Fraud

Who seeks heaven's joys, from impious levity secure,
Let him from every fraud preserve his spirit pure.

Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.


Mu. Varadarajan

பிறரால்‌ இகழப்படாமல்‌ வாழ விரும்புகின்றவன்‌, எத்தன்மையான பொருளையும்‌ பிறரிடமிருந்து வஞ்சித்துக்‌ கொள்ள எண்ணாதபடி தன்‌ நெஞ்சைக்‌ காக்கவேண்டும்‌.


Parimelalagar

எள்ளாமை வேண்டுவான் என்பான் - வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான்; எனைத்து ஒன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க.
விளக்கம்:
('எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும், நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல், ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக் கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.)


Manakkudavar

கள்ளாமையாவது யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாராதல். (இதன் பொருள்) பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல் லப்படுமவன், யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்க,
(என்றவாறு) இது களவு ஆகாதென்றது.