குறள் 256

புலான்மறுத்தல்

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

thinatrporuttaal kollaathu ulakenin yaarum
vilaipporuttaal oonraruvaa ril


Shuddhananda Bharati

Abstinence from flesh

None would kill and sell the flesh
For eating it if they don't wish.


GU Pope

The Renunciation of Flesh

'We eat the slain,' you say, by us no living creatures die;
Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy?

If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.


Mu. Varadarajan

புலால்‌ தின்னும்பொருட்டு உலகத்தார்‌ உயிர்களைக்‌ கொல்லாதிருப்பாரானால்‌, விலையின்‌ பொருட்டு ஊன்‌ விற்பவர்‌ இல்லாமல்‌ போவர்‌.


Parimelalagar

தினற் பொருட்டு உலகு கொல்லாது எனின்-பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின்; விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல்-பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை.
விளக்கம்:
('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. 'பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக உன் விற்பார் யாரும் இல்லை,
(என்றவாறு) இது கொன்று தின்னாது விலைக்குக் கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை யென்றார்க்கு , அதனாலுங் கொலைப்பாவம் வருமென்று கூறிற்று.