குறள் 249

அருளுடைமை

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

thaerulaathaan maeipporul kandatrraal thaerin
arulaathaan seiyum aram


Shuddhananda Bharati

Compassion

Like Truth twisted by confused mind
Wisdom is vain in hearts unkind.


GU Pope

The Possession of Benevolence

When souls unwise true wisdom's mystic vision see,
The 'graceless' man may work true works of charity.

If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.


Mu. Varadarajan

அருள்‌ மேற்கொள்ளாதவன்‌ செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால்‌, அஃது அறிவு தெளியாதவன்‌ ஒரு நூலின்‌ உண்மைப்‌ பொருளைக்‌ கண்டாற்‌ போன்றது.


Parimelalagar

அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின்; தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும்.
விளக்கம்:
(மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப் பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்து விடும்; அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்துவிடும் என்பது ஆயிற்று; ஆகவே, பிற அறங்கட்கெல்‘ம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்க வரும் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற் போலும் ; ஆராயின், அருளில்லாதான் செய்யும் அறமும்,
(என்றவாறு). இஃது அறஞ்செய்யவும் மாட்டாரென்றது,