குறள் 246

அருளுடைமை

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

porulneengkip pochsaandhthaar yenpar arulneengki
allavai seitholuku vaar


Shuddhananda Bharati

Compassion

Who grace forsake and graceless act
The former loss and woes forget.


GU Pope

The Possession of Benevolence

Gain of true wealth oblivious they eschew,
Who 'grace' forsake, and graceless actions do.

(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)


Mu. Varadarajan

அருள்‌ இல்லாதவராய்‌ அறமல்லாதவைகளைச்‌ செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித்‌ தம்‌ வாழ்க்கையின்‌ குறிக்கோளை மறந்தவர்‌ என்பர்‌.


Parimelalagar

அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை; பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப் பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர்.
விளக்கம்:
('உறுதிப் பொருள்: அறம். துன்புறுதல், பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலாராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய் தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியு முடையவ ரென்று சொல்லுவர்,
(என்றவாறு). இது பொருளில்லையாமென்றது.