குறள் 245

அருளுடைமை

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி

allal arulaalvaarkku illai valivalangkum
mallanmaa gnyaalang kari


Shuddhananda Bharati

Compassion

The wide wind-fed world witness bears:
Men of mercy meet not sorrows.


GU Pope

The Possession of Benevolence

The teeming earth's vast realm, round which the wild winds blow,
Is witness, men of 'grace' no woeful want shall know.

This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.


Mu. Varadarajan

அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத்‌ துன்பம்‌ இல்லை: காற்று இயங்குகின்ற வளம்‌ பொருந்திய பெரிய உலகத்தில்‌ வாழ்வோரே இதற்குச்‌ சான்று ஆவர்‌.


Parimelalagar

அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையோர்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது; வளி வழங்கும் மல்லம்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று.
விளக்கம்:
(சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார், 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அருளுடையார்க்கு அல்லலில்லை; அதற்குச் சான்று காற் றியங்குகின்ற வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம்,
(என்றவாறு) இஃது அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார் மாட்டே காணப்படு மென்றது.