குறள் 243

அருளுடைமை

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

arulsaerndhtha naechinaark killai irulsaerndhtha
innaa ulakam pukal


Shuddhananda Bharati

Compassion

The hearts of mercy shall not go
Into dark worlds of gruesome woe.


GU Pope

The Possession of Benevolence

They in whose breast a 'gracious kindliness' resides,
See not the gruesome world, where darkness drear abides.

They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.


Mu. Varadarajan

அறியாமையாகிய இருள்‌ பொருந்திய துன்ப உலகில்‌ இருந்து வாழும்‌ வாழ்க்கை, அருள்‌ பொருந்திய நெஞ்சம்‌ உடையவர்களுக்கு இல்லை.


Parimelalagar

இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல்; அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை.
விளக்கம்:
('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன்கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை; அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அருளைப் பொருந்தின நெஞ்சினையுடையவர்க்கு உருளைப் பொ ருந்தின நரக லோகம் புகுதலில்லை ,
(என்றவாறு). இது நரகம் புகாரென்றது.