குறள் 229

ஈகை

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்

iraththalin innaathu manra nirappiya
thaamae thamiyar unal


Shuddhananda Bharati

Charity

Worse than begging is that boarding
Alone what one's greed is hoarding.


GU Pope

Giving

They keep their garners full, for self alone the board they spread;-
'Tis greater pain, be sure, than begging daily bread!

Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.


Mu. Varadarajan

பொருளின்‌ குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப்‌ பிறர்க்கு ஈயாமல்‌ தாமே தமியராய்‌ உண்பது வறுமையால்‌ இரப்பதைவிடத்‌ துன்பமானது.


Parimelalagar

நிரப்பிய தாமே தமியர் உணல்-பொருட்குறை நிரப்ப வேண்டிய வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல்; இரத்தலின் இன்னாது மன்ற-ஒருவார்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக.
விளக்கம்:
(பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக்குறித்து அத்துணை ஈட்டுதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை. தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.) --


Manakkudavar

(இதன் பொருள்) இரத்தல்போல மெய்யாக இன்னாதாம் ; தேடின வுணவைத தாமே தமியராயிருந் துண்டல்,
(என்றவாறு). தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.