குறள் 228

ஈகை

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்

eeththuvakkum inpam ariyaarkol thaamutaimai
vaiththilakkum vanka navar


Shuddhananda Bharati

Charity

The joy of give and take they lose
Hard-hearted rich whose hoarding fails.


GU Pope

Giving

Delight of glad'ning human hearts with gifts do they not know.
Men of unpitying eye, who hoard their wealth and lose it so?

Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?


Mu. Varadarajan

தாம்‌ சேர்த்துள்ள பொருளைப்‌ பிறர்க்குக்‌ கொடுக்காமல்‌ வைத்திருந்து பின்‌ இழந்துவிடும்‌ வன்கண்மை உடையவர்‌ பிறர்க்குக்‌ கொடுத்து மகிழும்‌ மகிழ்ச்சியை அறியாரோ?


Parimelalagar

தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர்-தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார்; ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்-வறியார்க்குவேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ!
விளக்கம்:
('உவக்கும்' என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம்; அஃது 'இன்பம்' என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக கின்ற வன்கண்ணா ,
(என்றவாறு). இஃது இடார் இழப்பரென்றது.