குறள் 227

ஈகை

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

paaththoon mareei yavanaichiasiyaennum theeppini
theeppini theendal arithu


Shuddhananda Bharati

Charity

Who shares his food with those who need
Hunger shall not harm his creed.


GU Pope

Giving

Whose soul delights with hungry men to share his meal,
The hand of hunger's sickness sore shall never feel.

The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.


Mu. Varadarajan

தான்‌ பெற்ற உணவைப்‌ பலரோடும்‌ பகுத்து உண்ணும்‌ பழக்கம்‌ உடையவனைப்‌ பசி என்று கூறப்படும்‌ தீய நோய்‌ அணுகுதல்‌ இல்லை.


Parimelalagar

பாத்து ஊண் மரீஇயவனை-எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது-பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை.
விளக்கம்:
(இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பகுத்து உண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை ,
(என்றவாறு). இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தாற் பொருள் குறை யும் ; அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றே? அவ்வாறு நினைத்தல் வேண்டா ; பகுத்துண்ணப் பசி வாராதென்று கூறிற்று.