குறள் 223

ஈகை

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள

ilanaennum yevvam uraiyaamai eethal
kulanutaiyaan kannae yula


Shuddhananda Bharati

Charity

No pleading, "I am nothing worth,"
But giving marks a noble birth.


GU Pope

Giving

'I've nought' is ne'er the high-born man's reply;
He gives to those who raise themselves that cry.

(Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth.


Mu. Varadarajan

யான்‌ வறியவன்‌' என்னும்‌ துன்பச்‌ சொல்லை ஒருவன்‌ உரைப்பதற்கு முன்‌ அவனுக்கு கொடுக்கும்‌ தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம்‌ உண்டு.


Parimelalagar

இலன் என்னும் எவ்வம் உரையாமை-யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும்; ஈதல்-அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும்; உளகுலன் உடையான்கண்ணே-இவை இரண்டு உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே.
விளக்கம்:
(மேல் 'தீது' என்றது ஒழிதற்கும் 'நன்று' என்றது செய்தற்கும் உரியவனை உயர்த்தியவாறு. இனி 'இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்' என்பதற்கு, 'அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல்' எனவும், 'அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், 'யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன்' எனக் 'கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல்' எனவும் உரைப்பாரும் உளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.)


Manakkudavar

(இதன் பொருள்) இரந்து வந்தார்க்கு இல னென்னாகின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும் குடிப்பிறந்தான் மாட்டே யுளதாம்,
(என்றவாறு). இது கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டுமென்றது.