குறள் 202

தீவினையச்சம்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

theeyavai theeya payaththalaal theeyavai
theeyinum anjchap padum


Shuddhananda Bharati

Fear of sin

Since evil begets evil dire
Fear ye evil more than fire.


GU Pope

Dread of Evil Deeds

Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe.

Because evil produces evil, therefore should evil be feared more than fire.


Mu. Varadarajan

தீயசெயல்கள்‌ தீமையை விளைவிக்கும்‌ தன்மை உடையனவாக இருத்தலால்‌, அத்‌ தீய செயல்கள்‌ தீயைவிடக்‌ கொடியனவாகக்‌ கருதி அஞ்சப்படும்‌.


Parimelalagar

தீயவை தீய பயத்தலான்-தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான்; தீயவை தீயினும் அஞ்சப்படும் - அத்தன்மையவாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும்.
விளக்கம்:
(பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில் கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்,
(என்றவாறு).