குறள் 140

ஒழுக்கமுடைமை

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார

ulakaththodu otda olukal palakatrrum
kallaar arivilaa thaara


Shuddhananda Bharati

Good decorum

Though read much they are ignorant
Whose life is not world-accordant.


GU Pope

The Possession of Decorum

Who know not with the world in harmony to dwell,
May many things have learned, but nothing well.

Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.


Mu. Varadarajan

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும்‌ முறையைக்‌ கற்காதவர்‌, பல நூல்களைக்‌ கற்றிருந்த போதிலும்‌ அறிவில்லாதவரே ஆவர்‌.


Parimelalagar

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்-உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்; பல கற்றும் அறிவிலாதார்-பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்.
விளக்கம்:
(உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும், கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும் செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் ஒருவாற்றான் தொகுத்துக் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும், உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்,
(என்றவாறு). இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலியுடைத்தென்பதூஉம் கூறிற்று.