குறள் 130

அடக்கமுடைமை

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

kathangkaaththuk katrradangkal aatrruvaan sevvi
arampaarkkum aatrrin nulaindhthu


Shuddhananda Bharati

Self

Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.


GU Pope

The Possession of Self-restraint

Who learns restraint, and guards his soul from wrath,
Virtue, a timely aid, attends his path.

Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger.


Mu. Varadarajan

சினம்‌ தோன்றாமல்‌ காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில்‌ சென்று அறம்‌ பார்த்திருக்கும்‌.


Parimelalagar

கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செல்வி-மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை; அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து-அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெற்றியின்கண் சென்று.
விளக்கம்:
(அடங்குதல்-மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி-தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி, முகங்களின் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன் மாட்டு , அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும்,
(என்றவாறு). இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது