குறள் 129

அடக்கமுடைமை

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

theeyinaatr sutdapun ullaarum aaraathae
naavinaatr sutda vadu


Shuddhananda Bharati

Self

The fire-burnt wounds do find a cure
Tongue-burnt wound rests a running sore.


GU Pope

The Possession of Self-restraint

In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;
In soul by tongue inflamed, the ulcer healeth never more.

The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.


Mu. Varadarajan

தீயினால்‌ சுட்ட புண்‌ புறத்தே வடு இருந்தாலும்‌ உள்ளே ஆறிவிடும்‌ . ஆனால்‌ நாவினால்‌ தீய சொல்‌ கூறிச்‌ சுடும்‌ வடு என்றும்‌ ஆறாது.


Parimelalagar

தீயினால் சுட்டபுண் உள் ஆறும் - ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும், மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்: நாவினால் சுட்டவடு ஆறாது-அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.
விளக்கம்:
(ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது, குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி அடக்கம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்; நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது,
(என்றவாறு).