குறள் 128

அடக்கமுடைமை

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

onraanundh theechsol porutpayan untaayin
nanraakaa thaaki vidum


Shuddhananda Bharati

Self

Even a single evil word
Will turn all good results to bad.


GU Pope

The Possession of Self-restraint

Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing.

If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.


Mu. Varadarajan

தீய சொற்களின்‌ பொருளால்‌ விளையும்‌ தீமை ஒன்றாயினும்‌ ஒருவனிடம்‌ உண்டானால்‌, அதனால்‌ மற்ற அறங்களாலும்‌ நன்மை விளையாமல்‌ போகும்‌.


Parimelalagar

தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்-தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும்-அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும்.
விளக்கம்:
(தீயசொல்லாவன-தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. 'ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல் லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும்,
(என்றவாறு). இது சால மொழி கூறினாலுந் தீதாமென்றது.