குறள் 1297

நெஞ்சொடுபுலத்தல்

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு

naanum marandhthaen avarmarak kallaayen
maanaa madanaechitr patdu


Shuddhananda Bharati

Chiding the heart

forget shame but not his thought
In mean foolish mind I'm caught.


GU Pope

Expostulation with Oneself

Fall'n ‘neath the sway of this ignoble foolish heart,
Which will not him forget, I have forgotten shame.

I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.


Mu. Varadarajan

காதலரை மறக்கமுடியாத என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சினோடு சேர்ந்து.,மறக்கத்‌ தகாததாகிய நாணத்தையும்‌ மறந்துவிட்டேன்‌.


Parimelalagar

இதுவும் அது. அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற் பட்டு - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன்.
விளக்கம்:
(மாணாமை - ஒருநிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந்தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும மறந்தேன்,' என்றாள்.)


Manakkudavar

(இதன் பொருள்) என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்; அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு . இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின் நெஞ்சு மறவாமையாலே யென்று அதனோடு புலந்து கூறியது.