குறள் 1292

நெஞ்சொடுபுலத்தல்

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு

uraaa thavarkkanda kannum avaraich
seraaaraenach saeriyaen naenjsu


Shuddhananda Bharati

Chiding the heart

O heart, you see how he slights me
Yet you clasp him as if friendly.


GU Pope

Expostulation with Oneself

'Tis plain, my heart, that he 's estranged from thee;
Why go to him as though he were not enemy?

O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."


Mu. Varadarajan

என்‌ நெஞ்சே! நம்மேல்‌ அன்பு கொள்ளாத காதலரைக்‌ கண்டபோதும்‌, அவர்‌ வெறுக்கமாட்டார்‌ என்று எண்ணி அவரிடம்‌ செல்கின்றாயே!


Parimelalagar

இதுவும் அது. என் நெஞ்சு - என் நெஞ்சே; உறாதவர்க்கண்ட கண்ணும் - மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; செறார் என அவரைச்சேறி - நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ?
விளக்கம்:
('அவரை' என்பது வேற்றுமை மயக்கம். 'பழங்கண்ணோட்டம் பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) என்னெஞ்சே! நீ அன்புறாதாரைக் கண்ட விடத்தும் சொற் றம் நீங்குவாரென அவர் மாட்டுச் செல்லாநின்றாய்,
(என்றவாறு). இது தலைமகள் தலைமகன் மாட்டுச் செல்லக் கருதிய நெஞ்சொடு புலந்து கூறியது.