குறள் 1289

புணர்ச்சிவிதும்பல்

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

malarinum maellithu kaamachiilarathan sevvi
sevvi thalaippadu vaar


Shuddhananda Bharati

Longing for reunion

Flower-soft is love; a few alone
Know its delicacy so fine.


GU Pope

Desire for Reunion

Love is tender as an opening flower. In season due
To gain its perfect bliss is rapture known to few.

Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.


Mu. Varadarajan

காமம்‌ மலரைவிட மென்மை உடையதாகும்‌; அந்த உண்மை அறிந்து அதன்‌ நல்ல பயனைப்‌ பெறக்கூடியவர்‌ சிலரே.


Parimelalagar

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. காமம் மலரினும் மெல்லியது - காம இன்பம் மலரினும் மெல்லியதாயிருக்கும்; அதன் செவ்வி தலைப்படுவார் சிலர் - அங்ஙனம் மெல்லியதாதலை யறிந்து அதன் செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர்.
விளக்கம்:
(தொட்ட துணையானே மனச் செவ்வி அழிவதாய மலர் எல்லாவற்றினும் மெல்லியது என்பது விளக்கலின், உம்மை சிறப்பின்கண் வந்தது. குறிப்பும், வேட்கையும், நுகர்சியும், இன்பமும் ஒரு காலத்தின்கண்ணே ஒத்து நுகர்தற்குரியார் இருவர், அதற்கு ஏற்ற இடனும் காலமும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகர வேண்டுதலின், 'அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்' என்றும், அவற்றுள் யாதானும் ஒன்றனாற் சிறிது வேறுபடினும் வாடுதலின், 'மலரினும் மெல்லியது' என்றும் கூறினான். 'குறிப்பு ஒவ்வாமையின் யான் அது பெறுகின்றிலேன்' என்பதாம். தலைமகள் ஊடல் தீர்வது பயன்.)


Manakkudavar

(இதன் பொருள்) எல்லாவற்றினும் மெல்லிதாகிய பூவினும் மெல்லிதாயிருக்கும் காமம்; அதனது செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர்,
(என்றவாறு) இது தலைமகன் புணர்ச்சிக் குறிப்புக்கண்டு பின்பு வாடிக் கொள்ளலாம்; இப்பொழுது ஊடுவையாயின், இக்காமஞ் செவ்விதப்பு மென்று புணர்ச்சி வேட்கையால் தலைமகள் நெஞ்சோடு கூறியது.