குறள் 1287

புணர்ச்சிவிதும்பல்

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து

uiththal arindhthu punalpaai pavaraepol
poiththal arindhthaen pulandhthu


Shuddhananda Bharati

Longing for reunion

To leap in stream which carries off
When lord is close to feign a huff.


GU Pope

Desire for Reunion

As those of rescue sure, who plunge into the stream,
So did I anger feign, though it must falsehood seem?

Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feigndislike which she knows cannot hold out long?


Mu. Varadarajan

வெள்ளம்‌ இழுத்துச்‌ செல்வதை அறிந்திருந்தும்‌ ஓடும்‌ நீரில்‌ பாய்கின்றவரைப்‌ போல்‌, பயன்படாமை அறிந்திருந்தும்‌ ஊடல்‌ கொள்வதால்‌ பயன்‌ என்ன?


Parimelalagar

இதுவும் அது.- உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல் - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? . புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்?
விளக்கம்:
('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் . புரைபடுதல். 'புலந்தாலும் பயனில்லை' என்பதாம். 'பொய்த்தல் அறிந்தென்' என்பது படாமையின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் போல முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன்; இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.)


Manakkudavar

(இதன் பொருள்) தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல, நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்துவைத்தும், புலக்கின்றது எதுக்கு?
(என்றவாறு). இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது