குறள் 1218

கனவுநிலையுரைத்தல்

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

thunjsungkaal tholmaelar aaki vilikkungkaal
naenjchaththar aavar viraindhthu


Shuddhananda Bharati

Dream visions

Asleep he embraces me fast;
Awake he enters quick my heart.


GU Pope

The Visions of the Night

And when I sleep he holds my form embraced;
And when I wake to fill my heart makes haste!

When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.


Mu. Varadarajan

தூங்கும்போது கனவில்‌ வந்து என்‌ தோள்மேல்‌ உள்ளவராகி, விழித்தெழும்போது உடனே விரைந்து என்‌ நெஞ்சில்‌ உள்ளவராகின்றார்‌.


Parimelalagar

தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது. துஞ்சுங்கால் தோள் மேலராகி - என் நெஞ்சு விடாது உறைகின்ற காதலர் யான் துஞ்சும் பொழுது வந்து என் தோள் மேலராய்; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தராவர் - பின் விழிக்கும் பொழுது விரைந்து பழைய நெஞ்சின் கண்ணராவர்.
விளக்கம்:
(கலவிவிட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து' என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ நோவற்பாலை யல்லை,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) காதலர் உறங்குங்காலத்துத் தோள்மேலராகி, விழித்த காலத்து விரைந்து மனத்தின்கண்ணே புகுவர்,
(என்றவாறு). இஃது உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவரென்று நகைக் குறிப்பினாற் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.