குறள் 1217

கனவுநிலையுரைத்தல்

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது

nanavinaal nalkaak kotiyaar kanavanaal
yenyemmaip peelip pathu


Shuddhananda Bharati

Dream visions

Awake he throws my overtures
Adream, ah cruel! he tortures!


GU Pope

The Visions of the Night

The cruel one, in waking hour, who all ungracious seems,
Why should he thus torment my soul in nightly dreams?

The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?


Mu. Varadarajan

நனவில்‌ வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர்‌, கனவில்மட்டும்‌ வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்‌?


Parimelalagar

விழித்துழிக் காணாளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது. நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாது கொடியவர்; கனவினான் எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி?
விளக்கம்:
(பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கி, 'கொடியார்' என்றும், கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர்; 'அது கண்டிலம்,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நனவின்கண் அருளாத கொடுமையையுடையார் கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?
(என்றவாறு) இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.