குறள் 1212

கனவுநிலையுரைத்தல்

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்

kayalunkan yaanirappath thuchitr kalandhthaarkku
uyalunmai saatrruvaen man


Shuddhananda Bharati

Dream visions

I beg these fish-like dark eyes sleep
To tell my lover how life I keep.


GU Pope

The Visions of the Night

If my dark, carp-like eye will close in sleep, as I implore,
The tale of my long-suffering life I'll tell my loved one o'er.

If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.


Mu. Varadarajan

கண்கள்‌ யான்‌ வேண்டுவதுபோல்‌ தூங்குமானால்‌,(அப்போது வரும்‌ கனவில்‌ காணும்‌) காதலர்க்கு யான்‌ தப்பிப்‌ பிழைத்திருக்கும்‌ தன்மையைச்‌ சொல்வேன்‌.


Parimelalagar

தூது விடக் கருதியான் சொல்லியது. கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் - துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண்கள் யான் இரந்தால் துஞ்சுமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - கனவிடைக் காதல்ரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே விரியச் சொல்வேன்.
விளக்கம்:
('கயலுண்கண்' என்றாள், கழிந்த நலத்திற்கு இரங்கி. உயல் - காம நோய்க்குத் தப்புதல். தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும், சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பு தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால், 'சாற்றுவேன்' என்றாள். இனி, அவையும் துஞ்சா: சாற்றலுங்கூடாது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள் கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) என்னுடைய கயல்போலும், உண்கண் யான் வேண்டிக்கொள்ள உறங்குமாயின், நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவே னென்று உறங்குகின்றதில்லையே,
(என்றவாறு). மன் - ஒழியிசையின்கண் வந்தது. கடலுண்கண் - பிறழ்ச்சியுடைய கண்.