குறள் 118

நடுவு நிலைமை

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி

chamanseithu seerthookkung koalpol amaindhthorupaal
koataamai saannork kani


Shuddhananda Bharati

Equity

Like balance holding equal scales
A well poised mind is jewel of the wise.


GU Pope

Impartiality

To stand, like balance-rod that level hangs and rightly weighs,
With calm unbiassed equity of soul, is sages' praise.

To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.


Mu. Varadarajan

முன்னே தான்‌ சமமாக இருந்து, பின்பு பொருளைச்‌ சீர்‌ தூக்கும்‌ துலாக்கோல்போல்‌ அமைந்து, ஒரு பக்கமாகச்‌ சாயாமல்‌ நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்‌.


Parimelalagar

சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல்-முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல; அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி-இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம்.
விளக்கம்:
(உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒரு பால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கவாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.)


Manakkudavar

(இதன் பொருள்) சமன்வரைப்பண்ணி யிரண்டுதலையுஞ் சீரொத்தால் தூக்கிப் பார்க்கப்படுகின்ற கோலைப் போல், வீக்கம் தாக்கமற்று ஒருவன் பக்கமாக நெஞ் சைக் கோடவிடாமை சான்றோர்க்கு அழகாவது,
(என்றவாறு). இது நடுவுநிலைமை வேண்டுமென்றது.