குறள் 1178

கண்விதுப்பழிதல்

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்

paenaathu paettaar ularmanno matrravark
kaanaathu amaivila kan


Shuddhananda Bharati

Wasteful look for wistful love

Ther's he whose lips loved, not his heart
Yet my eyes pine seeing him not.


GU Pope

Eyes consumed with Grief

Who loved me once, on loving now doth here remain;
Not seeing him, my eye no rest can gain.

He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not


Mu. Varadarajan

உள்ளத்தால்‌ விரும்பாமலே சொல்லளவில்‌ விரும்பிப்‌ பழகியவர்‌ ஒருவர்‌ இருக்கின்றார்‌. அவரைக்‌ காணாமல்‌ கண்கள்‌ அமைதியுறவில்லை.


Parimelalagar

காதலர் பிரிந்து போயினாரல்லர், அர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. பேணாது பெட்டார் உளர் - நெஞ்சால் விழையாது வைத்துச் சொல் மாத்திரத்தால் விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க் கண் காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?
விளக்கம்:
(செயலாற் பிரிந்து நின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமம் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை 'யான் ஆற்றவும், கண்கள் அவரைக் காண்டற்கு விருமபாநின்றன: என்பதாம். இனிக 'கொண்கனை' என்று பாடமாயின், 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை; இவ்வாறே தம்மை யொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ?' என்று உரைக்க. இதற்கு மன் அசைநிலை)


Manakkudavar

(இதன் பொருள்) விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம்மைக்காண் பல் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில் என் கண்கள்; இத னை யொழியப்பிறவு முளவோ? (எ-று)