குறள் 1159

பிரிவாற்றாமை

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ

thotitrsutin allathu kaamanoi pola
vititrsudal aatrrumo thee


Shuddhananda Bharati

Pangs of separation

Can fire that burns by touch burn like
Parting of the hearts love-sick?


GU Pope

Separation unendurable

Fire burns the hands that touch; but smart of love
Will burn in hearts that far away remove.

Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?


Mu. Varadarajan

நெருப்பு, தன்னைத்‌ தொட்டால்‌ சுடுமே அல்லாமல்‌ காமநோய்போல்‌ தன்னை விட்டு நீங்கியபொழுது சுடவல்லதாகுமோ?


Parimelalagar

'காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதலல்லது; காமநோய் போல விடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ? மாட்டாது.
விளக்கம்:
(சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப் படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'கடல்' என்றார். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தீண்டினாற் சுடுமல்லது காமநோய் போல், நீங்கினாற் சுட வற்றோ தீ,
(என்றவாறு). தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழிகூறியது.