குறள் 1156

பிரிவாற்றாமை

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை

pirivuraikkum vankannar aayin arithavar
nalkuvar yennum nasai


Shuddhananda Bharati

Pangs of separation

His hardness says, "I leave you now"
Is there hope of his renewed love?


GU Pope

Separation unendurable

To cherish longing hope that he should ever gracious be,
Is hard, when he could stand, and of departure speak to me.

If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.


Mu. Varadarajan

பிரிவைப்பற்றித்‌ தெரிவிக்கும்‌ அளவிற்குக்‌ கல்‌ நெஞ்சம்‌ உடையவரானால்‌, அத்தகையவர்‌ திரும்பி வந்து அன்பு செய்வார்‌ என்னும்‌ ஆசை பயனற்றது.


Parimelalagar

தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்துசொல்லிய தோழிக்குச் சொல்லியது. அவர் பிரிவு உரைக்கும் வண்கண்ணராயின் - நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்றும் தம் பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும்.
விளக்கம்:
(அருமை: பயன்படுதல் இல்லாமை. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது?' என்பதாம். அழுங்குவித்தல்: பயன்.)


Manakkudavar

(இதன் பொருள்) பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின், அவர் மறுத்து வந்து நல்குவரென்னும் ஆசை யில்லை,
(என்றவாறு). இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.