குறள் 1155

பிரிவாற்றாமை

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு

oampin amaindhthaar pirivompal matrravar
neengkin arithaal punarvu


Shuddhananda Bharati

Pangs of separation

Stop his parting - my life to save
Meeting is rare if he would leave.


GU Pope

Separation unendurable

If you would guard my life, from going him restrain
Who fills my life! If he depart, hardly we meet again.

If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs,intercourse will become impossible.


Mu. Varadarajan

காத்துக்‌ கொள்வதானால்‌ காதலராக அமைந்தவரின்‌ பிரிவு நேராமல்‌ காக்க வேண்டும்‌; அவர்‌ பிரிந்து நீங்கினால்‌ மீண்டும்‌ கூடுதல்‌ அரிது.


Parimelalagar

இதுவும் அது. ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம்.
விளக்கம்:
(ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று; வினைமாற்றின்கண் வந்தது.)


Manakkudavar

(இதன் பொருள்) காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க ; அவர் பிரிவராயின், பின்பு கூடுதல் அரிது,
(என்றவாறு). மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.