குறள் 1153

பிரிவாற்றாமை

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்

aritharoa thaetrram arivutaiyaar kannum
pirivo ridaththunmai yaan


Shuddhananda Bharati

Pangs of separation

On whom shall I lay my trust hence
While parting lurks in knowing ones?


GU Pope

Separation unendurable

To trust henceforth is hard, if ever he depart,
E'en he, who knows his promise and my breaking heart.

As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.


Mu. Varadarajan

அறிவுடைய காதலரிடத்தும்‌ பிரிவு ஒரு காலத்தில்‌ உள்ளபடியால்‌, அவர்‌ 'பிரியேன்‌' என்று சொல்லும்‌ உறுதிமொழியை நம்பித்‌ தெளிவது அரிது.


Parimelalagar

இதுவும் அது. அறிவு உடையார் கண்ணும் - பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் - ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்; தேற்றம் அரிது - அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத் தேறும் தேற்றம் அரிதாயிருந்தது. அரோ: அசைநிலை. உம்மை : உயர்வு சிறப்பின்கண் வந்தது.


Manakkudavar

(இதன் பொருள்) பிரியேனென்ற தஞ் சொல்லும் நம்பிரிவாற்றாமையும் அறிந்த லுடையராய காதலர்கண்ணும், ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான், அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டன்புடையரெனத் தேறுந்தேற்றம் அரிதாயிருந்தது.