குறள் 1152

பிரிவாற்றாமை

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு

inkan utaiththavar paarval pirivanjsum
punkan utaiththaal punarvu


Shuddhananda Bharati

Pangs of separation

His sight itself was pleasing, near
Embrace pains now by partings fear.


GU Pope

Separation unendurable

It once was perfect joy to look upon his face;
But now the fear of parting saddens each embrace.

His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.


Mu. Varadarajan

அவருடைய பார்வை முன்பு இன்பம்‌ உடையதாக இருந்தது; இப்போது அவருடைய கூட்டம்‌ பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம்‌ உடையதாக இருக்கின்றது.


Parimelalagar

பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. அவர் பார்வல் இன்கண் உடைத்து - தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்ப முடைத்தாயிருக்கும்; புணர்வு பிரிவஞ்சும் புண் கண் உடைத்து - இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கவும் அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று; அவர் அன்பின் நிலைமை இது.
விளக்கம்:
('பார்வல்' என்றதனால், புணர்ச்சிபெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. புன்கண் என்னும் காரணப் பெயர் காரியத்தின் மேலாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, ''முள்ளுறழ் முளையெயிற்று அமிழ்தூறுந்தீநீரைக் - கள்ளினும் மகிழ்செய்யும் என உரைத்தும் அமையார், என் ஒள்ளிழை திருத்தும்'' (கலித்.பாலை. 3) பண்டையிற் சிறப்பால். அவன் பிரிதற் குறிப்புக் காட்டி அச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்: பயன்.)


Manakkudavar

(இதன் பொருள்) நங்காதலரை வரவு பார்த்திருக்கு மது , இன்பத்தையுடைத்து; அவரைப் புணர்ந்திருக்கும் இருப்பு, பிரிவாரோவென்று அஞ்சப்படுந் துன்பத்தை யுடைத்து,
(என்றவாறு).